×

பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவிக்கு 51 பேர் மனுத்தாக்கல்

பெரணமல்லூர், டிச.13: பெரணமல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 51  பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் நேற்று கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 39 பேரும் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2பேர் என நேற்று 51 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

பெரணமல்லூர் ஒன்றியம் பொருத்தவரை இதுவரை 57 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 25 பேரும், 363 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 102 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...