×

தந்தைக்கு விபத்து நடந்ததாக கூறி மாணவியை பலாத்காராம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு அடி, உதை

குடியாத்தம், டிச.13: குடியாத்தம் அருகே தந்தைக்கு விபத்து நடந்ததாக கூறி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியாத்தம் அடுத்த ராசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன்(42). அதே பகுதியில் உள்ள சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(30). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பார்த்திபனிடம் கூலித் தொழிலாளியாக வேலை செய்தார். இந்நிலையில், பார்த்திபனின் 11 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு நிதிஉதவி பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து, நேற்று மாலை வினோத்குமார் பள்ளிக்கு சென்று பாத்திபனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக பள்ளி தலைமையாசிரியரிடம் கூறி மாணவியை அழைத்து சென்றார்.

பின்னர், பள்ளி அருகே உள்ள ஆற்றங்கரையில் மாணவியின் உடைகளை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த மாணவி அலறி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு வினோத்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் வினோத்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வினோத்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள பொதுமக்கள், ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பார்த்திபன் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : rape student ,
× RELATED பாலக்கோடு அருகே சோளக்காட்டிற்கு துக்கிச்சென்று மாணவி பலாத்கார முயற்சி