×

பவுர்ணமி கிரிவலம்-ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி, டிச. 13: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் மாடவீதியை சுற்றி கிரிவலம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 16 முறை மாடவீதியை சுற்றி கிரிவலம் வந்தனர். மாட வீதியை சுற்றி 16 முறை வருவதற்கு காரணம் மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு 16 பட்டைகள் உண்டு. இதனால் 16 பேறுகளை பெற்று வாழலாம் என மக்களின் நம்பிக்கை. இரவு 7.30 மணியளவில் உற்சவர் அம்பாள் பெரியநாயகி 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து இரவு 11 மணியளவில் அர்த்த ஜாம பூசை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Purnami Kirivalam-Swing Festival ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது