×

பணம் வைத்து சூது 5 பேர் கைது

வாடிப்பட்டி, டிச.12: சமயநல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். சமயநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த  ராஜா(29),    மாரியப்பன்(28), கோபால்(46), முத்தையா(50), துரைப்பாண்டி(49) உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை