×

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் சோமவாரவிழா

புதுக்கோட்டை, டிச. 12: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் புகழ்வாய்ந்த சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது இக்கோவிலில் கார்த்திகை மாத சோம வார விழாவை முன்னிட்டு நான்காவது வாரம் சுவாமி அம்பாளை வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்து பால் பழங்கள் உள்ளிட்ட பதினெட்டு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பட்டாடை உடுத்தி மலர் அலங்காரம் செய்து 9 கலசங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு 1008 சங்குகள் நெல் தானியத்தில் சுயம்புலிங்க வடிவில் வடிவமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து யாகம் செய்தனர். புனித கலசங்கள் மற்றும் சங்குகளில் உள்ள புனித நீரைக் கொண்டு சுவாமி ,அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள், விழாக்குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்

Tags : Somavara Ceremony ,Thiruvangulam Arangulnathar Temple ,
× RELATED கழுகாசலமூர்த்தி கோயிலில் 5வது சோமவார...