கறம்பக்குடி, டிச.12:கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று 42 வேட்பு மனுக்கள் தாக்கல் மொத்தம் 55 மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக வேட்பு மனு தாக்கல் செய்ய படிவங்களை பெற்று வருகின்றனர். இரண்டு நாட்கள் ஒருவர் கூட ஊராட்சி தலைவர், ஒன்றியகுழு உறுப்பினர் பதவி மற்றும் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு மொத்தம் இரண்டு நாட்கள் வரை 13 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
நேற்று மூற்றாவது நாளை முன்னிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பும் பின்பும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஆவலுடன் வந்தனர். அதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 பெரும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 23 பேரும் மொத்தம் நேற்று மட்டும் 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். மேலும் கடந்த மூன்று நாட்களாக மொத்தம் இது வரை 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் அதிகரிக்கும் என்று பொது மக்கள் மற்றும் வாக்காளர்கள் கூறுகின்றனர். பாதுகாப்பு பணியில் கறம்பக்குடி காவல் துறையினர் செய்து வருகின்றனர்.