×

அனாதை ஆண் குழந்தை தத்து நிறுவனத்தில் ஒப்படைப்பு

புதுக்கோட்டை, டிச.12: புதுக்கோட்டை அருகே அனாதையாக கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தை சைல்டு லைனில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா ஒடுகம்பட்டியிலுள்ள தர்காவின் பின்புறத்தில் டிசம்பர் 5ம்தேதி கைவிடப்பட்ட நிலையில்ஒரு ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அந்த குழந்தை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 6 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தையின் உடல்நிலை தேறியதால் அக்குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனபால் மற்றும் சைல்டுலைன் லூர்துமேரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் ஒப்படைத்தார். மாவட்ட கலெக்டர் முன்னிலையில் அக்குழந்தை சிறப்பு தத்து நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.

Tags : child adoption agency ,
× RELATED அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி