தூத்துக்குடி: சமத்துவ மக்கள் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் இடங்கள் குறித்த பட்டியலை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவை நிர்வாகிகள் சந்தித்து வழங்கினர். எர்ணாவூர் நாராயணன் தலைமையிலான சமத்துவ மக்கள் கழகம் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பும் இடங்களுக்கான பட்டியலை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சந்தித்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் திமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், சாயர்புரம் நகரச் செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், சமக மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் அருண்சுரேஷ்குமார், மாவட்டப் பிரதிநிதிகள் பழனிவேல், வின்சென்ட், பெரியசாமி, வக்கீல் அணி மாவட்டச் செயலாளர் அந்தோணிபிச்சை, தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் சதாசிவம், இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சிவசு முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.