புதுக்கோட்டை, டிச. 11: புதுக்கோட்டை அருகே போடம்மாள்புரத்தில் விவசாய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிக்கு செல்லும் பாதையை மாதக்கணக்கில் சேதமடைந்த நிலையிலேயே உள்ளது. மேலும் அண்மையில் பெய்த தொடர்மழையால் இவ்வங்கிக்கு செல்லும் மேலும் உருக்குலைந்ததோடு சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் விவசாயிகள் உள்ளிட்ட பல்ேவறு தர்ப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வங்கிக்கு செல்லும் விவசாயிகள், விவசாயத்திற்கான உரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உர மூட்டை ஏற்றப்பட்ட பைக்கில் ஏற்றிவரும்போது, சேறும், சகதியுமான சாலையில் வழுக்கி கீழே விழும் அபாயம் நிலவுகிறது.
இதனால் அவதிப்படும் விவசாயிகள், இதற்கு உரிய தீர்வு காணவும், தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் சாலையில் இருந்து விவசாய கூட்டுறவு வங்கிக்கு செல்லும் பாதையை சீரமைத்து தருவதோடு மழை நீர் தேங்காமலும் இருக்க வழிவகை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.