×

முத்துப்பேட்டை ஜமாலியா தெரு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் கடும் அவதி

முத்துப்பேட்டை: முத்துபேட்டை ஜமாலியா தெரு சாலையில் பெக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாசல் அருகே உள்ள ஜமாலியா தெருவில் அதிகளவில் மக்கள் வசித்து வருகின்றனர். அதனால் அதிகளவில் குடியிருப்புகள் மற்றும் காலனி வீடுகள் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்வதில் பல ஆண்டுகளாக பினதங்கிய நிலையில் உள்ளது. இந்தநிலையில் குட்டியார் பள்ளிவாசல் அருகில் இருந்து செல்லம் சிமென்ட் சாலையானது ஜமாலியா தெருவை கடந்து காமராஜர் காலனி வழியாக செம்படவன்காடு வரை செல்கிறது. இந்த சாலை போடும்போதே போதிய தரமில்லாமல் போடப்பட்டதால் சாலை முழுவதும் சேதமாகி நெடுவேங்கும் குண்டும் குழியுமாக காட்சியளிகிறது.

இந்நிலையில் இப்பகுதியில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் சென்று வரும் சூழ்நிலை உள்ளது. தற்பொழுது மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீரும் இரண்டொரு கலந்து சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடைகிறது. அதிகளவில் கழிவுநீர் வரும்போது ஆறுகள் போல பெருக்கெடுத்து செல்கிறது. அதேபோல் குப்பைகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதில் ஜமாலியா தெரு ஓரம் உள்ள அரசகுளம் கரையில் அதிகளவில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் அப்பகுதியை சேர்ந்த பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஆகவே பேரூராட்சி செயல் அலுவலர் நேரடியாக பார்வையிட்டு அப்பகுதியில் தேங்கிகிடக்கும் கழிவுநீரை வெளியேற்றவும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muttupettai Jamalia Street Road ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து