×

பிரதோஷ வழிபாடு

தேவதானப்பட்டி, டிச. 10:  தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் மாயாபாண்டீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மேல்மங்கலம்  வராகநதி ஆற்றங்கரையில் உள்ள மாயாபாண்டீஸ்வரர் கோயிலில் நேற்று   பிரதோஷ வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாரநந்தி,  மாயாபாண்டீஸ்வரர்  ஆகியோருக்கு  மஞ்சள்பொடி, மாபொடி, திருமஞ்சனதிரவியம், பால், தயிர், தேன், பழங்கள், விபூதி, பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.  

பின்னர் விநாயகர், முருகன், அதிகாரநந்தி, மாயாபாண்டீஸ்வரர், பிருகநாயகிஅம்மாள், சண்டிகேஸ்வரர்,  தட்சணாமூர்த்தி,  துர்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.  சிவனடியார்களால் திருமுறைகள் பாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் சிவசிதம்பரம் செய்திருந்தார். கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Pratosh ,
× RELATED பிரதோஷ வழிபாடு