×

வேளாண் அதிகாரி விளக்கம் மண்ணச்சநல்லூர் அருகே குளிக்கசென்ற ஜவுளி வியாபாரி வாய்க்கால் நீரில் மூழ்கினார் உடலை தேடும்பணி தீவிரம்

மண்ணச்சநல்லூர், டிச.10: மண்ணச்சநல்லூர் அருகே வாய்க்காலில் குளித்த ஜவுளி வியாபாரி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கல்பாளையத்தை சேர்ந்த ராமநாதன் மகன் சந்திரசேகர் (33). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் இருசக்கர வாகனத்தில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மண்ணச்சநல்லூரில் உள்ள பெருவாளைவாய்க்காலில் குளிக்கச் சென்றார். அப்போது வாய்க்காலின் நடுப்பகுதியில் குளித்துக்கொண்டிருந்தவர் வாய்க்காலில் அதிக நீர்வரத்து காரணமாக நீந்தி கரைக்கு வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் ரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தேடியும் சந்திரசேகர் உடல் கிடைக்கவில்லை. மேலும் இரவு நேரம் என்பதால் இன்று காலை தேடுதல் பணி தொடரும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : textile dealer ,Mannachanallur ,
× RELATED எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிடுச்சு: வேட்பாளர காணோம் தேடும் தொண்டர்கள்