×

சிஎஸ்ஐஆர்- பெல் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி, டிச.10: திருச்சி பிஹெச்இஎல் குழுமம், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக்குழு (சி.எஸ்.ஐ.ஆர்) உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் சி.எஸ். உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல் திட்டம் பல்வேறு நீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குவதாகும் ஆகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிஹெச்இஎல் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நலின் ஷிங்கால் மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் இயக்குநர் ஜெனரல், சேகர் சி. மண்டே ஆகியோர் கையெழுத்திட்டனர். பிஹெச்இஎல் குழுமத்தின் தொழிலக முறைமைகள் மற்றும் தயாரிப்புகள் துறை இயக்குநர் பாலகிருஷ்ணன், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குநர் கமலேஷ் தாஸ் மற்றும் பிஹெச்இஎல் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் மூத்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு