×

மேற்கூரையை பிரித்து துணிகரம் கொத்தனார் வீட்டில் வெள்ளி பொருட்கள் திருட்டு

கெங்கவல்லி, டிச.10: கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு கடம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவா(28). இவர் கொத்தனாரான இவருக்கு மகரஜோதி என்ற மனைவியும், கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சிவா வேலைக்காக வெளியூர் சென்றுவிட்ட நிலையில், மகரஜோதி வீட்டின் அருகே உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், நேற்று வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ₹30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து, வீட்டிற்கு வந்த மகரஜோதி பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, பீரோவை திறந்து பார்த்தபோது, வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Theft ,clowns ,house ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி