தூத்துக்குடி டிச. 10: தூத்துக்குடி கடற்கரையில் மத்திய தொழில் பாதுகாப்புபடை சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி துறைமுக கடற்கரையில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டென்ட் ஆச்சாரியா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார்.
இதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் பங்கேற்றடனர். மேலும் அவர்கள் கடற்கரைக்கு வருகை தந்த பொதுமக்களிடம் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினர். மேலும் அவர்கள் அது தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அதிகாரிகள் தருண்தத்தா, சங்கர் உள்ளிட்டவர்களும் தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.