×

அஞ்சல்துறை சார்பில் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

கோவை,டிச.9: கோவையில் அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கவுள்ளது.கோவை, கூட்ஷெட் ரோட்டில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் தலைமையில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சல் சம்பந்தமான குறைகளை வாடிக்கையாளர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம், அல்லது  ‘முதுநிலை கண்காணிப்பாளர், கோவை மண்டல அஞ்சலகம், கோவை 641001’ என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். அஞ்சல் உறையின் மேல் ‘தாக் அதாலத் கேஸ்’ என்று எழுதி, நாளைக்குள் (டிச.10) அனுப்பி வைக்க வேண்டும். மணியார்டர், விபிபி, விபிஎல், பதிவுத் தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்களுக்கு முழு விலாசத்தோடு பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும் என அஞ்சல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Customer Oversight Meeting ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்