×

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

தண்டையார்பேட்டை: கொளத்தூர், பூம்புகார் நகரை சேர்ந்தவர் சிம்மலட்சுமி (24). இவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 30ம் தேதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவருக்கு காசநோய் இருந்ததாகவும் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மருத்துவர்கள் சரியான சிகிச்சை அளிக்காததால் தான் சிம்மலட்சுமி உயிரிழந்தார் எனக்கூறி, அவரது உறவினர்கள் நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினரும், போலீசாரும் உறவினர்களிடம் பேசி சமரசம் செய்தனர்.  இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Relatives ,hospital ,
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...