×

திருமணமான 3 மாதங்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை

சேலம், டிச.5:பேளூர் அடுத்த சந்திரவலசு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(25). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தமிழ்பிரபா என்பவருக்கும், கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான நாள் முதலே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த வேல்முருகன், வீட்டில் யாரும் இல்லாத போது, பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பலனின்றி, வேல்முருகன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்