×

எறையூர் சர்க்கரை ஆலை

பெரம்பலூர், டிச.5: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள ஜவஹர் லால்நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியாக ஜெய்னுலாப்தீன் என்பவர் பதவி வகித்து வந்தார். தற்போது புதிய தலைமை நிர்வாகியாக முகமது அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தலைமை நிர்வாகியின் முதல் அறிமுகக் கூட்டம் நேற்று 4ம்தேதி மாலை 4 மணிக்கு பெரம்பலூர் சர்க் கரை ஆலை தலைமை நிர்வாகி அலுவலகத்தில் நடைபெற்றது. சர்க்கரை ஆலையின் பொது மேலா ளர் விஜயா, தலமைப் பொறியாளர் பிரபாகரன், நிர்வாக அலுவலர் குமார ராஜா, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, துணைத் தலைமைப் பொ றியாளர் மணிவண்ணன், துணை தலைமை வேதியி யலாளர் மாதவன், தலை மைக் கரும்பு அலுவலர் (பொ)சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கரும்பு விவசா யிகள் சங்க பிரதிநிதிகள் செந்துறை ஞானமூர்த்தி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழக கரும்பு விவசாயிகள் சங்கச் செய லாளர் அன்பழகன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங் கத் தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாநிலச் செய லாளர் ராஜேந்திரன், டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், செயலாளர் ராமசாமி, பங்குத்தாரர்கள் சங்கம் ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு வி வசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், ஞானசேகர், கரும்பு விவசாயிகள் சங்கம் புலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Eraiyur Sugar Plant ,
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...