×

கிரானைட் கம்பெனியில் கல் விழுந்து அசாம் தொழிலாளி பலி

சூளகிரி, டிச.4: சூளகிரி அடுத்த அளகுபாவி அருகிலுள்ள தனியார் கிரானைட் கம்பெனியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆல்பாட் ஒராங்(35) என்பவர் கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம்  கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென கற்கள் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Assam ,granite company ,
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...