×

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் விழுந்த மாடு மீட்பு

ஒட்டன்சத்திரம், டிச. 4: ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர். ஒட்டன்சத்திரம் அடுத்த முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி (60). இவர் தனது தோட்டத்தில் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று, அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் கிணற்றில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கிணற்றில் விழுந்த மாடு தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது. இதுகுறித்து உடனே ஒட்டன்சத்திரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

Tags : Ottansatham ,
× RELATED ஒட்டன்சத்திரம்...