×

இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கு பட்டிவீரன்பட்டி மாணவர் தேர்வு

பட்டிவீரன்பட்டி, டிச. 4: இந்திய டேபிள் டென்னிஸ் போட்டிக்கு பட்டிவீரன்பட்டி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவர் தருண்விஜய். இவர் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இவர், கடந்த நவ.25, 26 தேதிகளில் கேரள மாநிலம் மூணாறில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் கலந்து கொண்டார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில் 5வது இடம் பிடித்து இந்திய சப்-ஜீனியர் அணிக்கு தருண்விஜய் தேர்வாகியுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஆசிய அளவில் நடைபெற உள்ள ஆசியா பசிபிக் பெடரேசன் 2020 கோப்பைகான டேபிள் டென்னிஸ் போட்டியில் 14வயதுக்குட்பட்ட இந்திய சப்-ஜீனியர் அணியில் தருண்விஜய் விளையாட உள்ளார்.இந்திய அணி சார்பில் விளையாட உள்ள மாணவரை என்எஸ்விவி பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் ராஜாராம், பள்ளி செயலர் பிரசன்னா, முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Pattiviranpatti ,table tennis team ,Indian ,
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்