×

நகை மதிப்பீட்டாளர் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் கார்ப்பரேஷன் வங்கி செயல்படுகிறது. இங்கு நகை மதிப்பீட்டாளராக  கோபி (38) என்பவர் வேலை செய்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நகை மதிப்பீட்டில் தவறு நடந்ததாக கூறி, அப்போதைய மேலாளர் கோபியை பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். அதன்படி கோபி பணத்தை செலுத்தியுள்ளார்.பின்னர், அந்த மேலாளர் பனியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு புதிதாக வந்த மேலாளர், மீண்டும் நகை மதிப்பீட்டில் தவறு நடந்துள்ளதாக கூறி பணம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கோபி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு சென்றார். கூட்டம் நடந்த அறைக்கு வெளியே நின்ற அவர், திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும், அங்கிருந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து  அழைத்து சென்று தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் அவரிடம் விசாரிக்கின்றனர்….

The post நகை மதிப்பீட்டாளர் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kalakatur ,Gopi ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!