கோவில்பட்டி, டிச. 4: கோவில்பட்டியில் பா.ம.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாமக வடக்கு மாவட்ட முன்னா ள் செயலாளர் வினோத்குமார், மத்திய மாவட்டத் தலைவர் ஜெபக்குமார் உள்ளிட்ட பாமகவைச் சேர்ந்த 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜ மாநில செயலாளர் னிவாசன், மாவட்டத் தலைவர் பாலாஜி முன்னிலையில் பாஜவில் இணைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாஜ மாவட்ட துணைத்தலைவர் முனிஷ், உள்ளாட்சி பிரிவு மாவட்ட துணைத்தலைவர் பாலனிவாசன், முன்னாள் நகரத் தலைவர் வேல்ராஜா, நகர இளைஞர் அணி தலைவர் காளிதாசன், நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன், தினேஷ்குமார், ஒன்றிய தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.