×

கரூர் வடக்கு காசிம் சாகிப் தெருவில் மந்தகதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணியால் பாதிப்பு

கரூர், டிச. 3: கரூர் வடக்கு காசிம் சாகிப் தெருவில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.கரூர் டவுன் காவல் நிலைய பகுதியில் இருந்து புதுத்தெரு செல்லும் சாலையோரம் வடக்கு காசிம் சாகிப் தெரு உள்ளது. குறுகிய இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்த தெருப்பகுதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிக்காக சாலை முழுவதும் தோண்டப்பட்டு குடியிருப்பு வாசிகள் நடந்து செல்லவே முடியாத நிலைக்கு மண் போடப்பட்டுள்ளது. இதனால், நடந்து செல்லவும், வாகனங்கள் செல்லவும் முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருவில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : Karur North Qasim Saqib Street ,
× RELATED கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை...