×

ஓட்டிகள் கடும் அவதி சம்பக சஷ்டி உற்சவம் நிறைவு

திருப்புத்தூர், டிச. 3:  திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் கடந்த ஆறு நாட்களாக நடந்தது வந்த சம்பக சஷ்டி உற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி கடந்த நவ.27ம் தேதி சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் தீபாராதனையும் நடந்தது. யோகபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதே போன்று மாலை 4.30 மணிக்கும் அஷ்ட பைரவர் யாகமும், 7 மணிக்கு பூர்ணாகுதியும், 7.15 மணிக்கு யோகபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும், 7.45 மணியளவில் தீபாராதனையும் நடந்தது. இந்த யாகம் கடந்த நவ.27ம் தேதி முதல் நேற்று டிச.2ம் தேதி வரை ஆறுநாட்கள் தொடர்ந்து இருவேலைகளிலும் சம்பவ சஷ்டி உற்சவ யாக வழிபாடு நடந்தது. இதில், நேற்று கடைசி நாள் வழிபாடு என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சம்பக சஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர். 

Tags : drivers ,Avadi Sambhaka Sastha Sastha Festival ,
× RELATED உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி...