×

பள்ளிப்பட்டி- கனகாபுரம் வழியில் தார்சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தல்

கடத்தூர், டிச.3: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளிப்பட்டியில் இருந்து கனகாபுரம் செல்லும் வழியில், மண் சாலையை, தார்சாலையாக அமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சிந்தல்பாடி பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் அரூர், கடத்தூர் பகுதிகளுக்கு வர பள்ளிப்பட்டி-கனகாபுரம் செல்லும் சுமார் 2கி.மீ சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழிப்பாதைகளில், மண் சாலையாக உள்ளது. இதனால் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி வாகனங்களை ஓட்ட முடியாத நிலையில் உள்ளது. எனவே, தார்சாலை அமைக்க ேவண்டும் என, கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்ைக எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, தார்சாலை அமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : road ,Kanakapuram ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...