×

ஓமன் நாட்டில் பணிபுரிய எலக்ட்ரீசியன்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, டிச.3: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓமன் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற எலக்ட்ரிக்கல் டெக்னீசியன், எலக்ட்ரிக்கல் ஓஎச் லைன் மேன் மற்றும் எலக்ட்ரீசியன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பணி அனுபவத்திற்கேற்ப ₹24 ஆயிரம் முதல் ₹37 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்குவதுடன், விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்ட திட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும். இப்பணிக்கான நேர்முகத்தேர்வு, வரும் 14 மற்றும் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-23 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

 நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச்சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் நகல்கள், இரண்டு புகைப்படத்துடன் செல்ல வேண்டும். மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.com வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags : Electricians ,Oman ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!