×

தொட்டில் ஏரியில் மதகு மறுசீரமைப்பு தீவிரம்

அயோத்தியாபட்டணம், டிச.3:  அயோத்தியாப்பட்டணம் அடுத்த வலசையூர் அருகே, 65 ஏக்கர் நிலப்பரப்பில் தொட்டில் ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரி நிரம்பி வருகிறது. ஏரி நிரம்பி வருவதால் வலசையூர் சுற்றுப்புற கிராம மக்களுக்கு குடிநீராக தட்டுப்பாடு நீங்கும், மேலும் பாசன தேவைக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதை தொடர்ந்து பாசன தேவைக்காக 3 மதகுகள் மறு சீரமைப்பு பணி நேற்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், தொட்டில் ஏரி நிரம்பினால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Cradle Lake ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை