கழுகுமலை, டிச 3: கழுகுமலையில் சங்கரன்கோவில் சாலையில் செயல்பட்டு வரும் தியான் கெல்த்கேர் மருத்துவமனையில் பொது மருத்துவ முகாம் நடந்தது. துவக்க விழாவுக்குத் தலைமை வகித்த ஆர்.எம்.ஆர். ரமேஷ், முகாமை துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற கழுகுமலை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு தியான் ஹெல்த் கேர் தலைமை மருத்துவர் சிவக்குமார், நாகராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மூட்டு தேய்மானம், நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக மருத்துவ பரிசோதனை, இசிசி, நுரையீரல் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, ரத்த சோகை மேற்கொள்ளப்பட்டதோடு மருந்து, மாத்திரை, மருத்துவ ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை தியான் மருத்துவமனை நிர்வாகி கிருஷ்ணப்பிரியா செய்திருந்தார்.