×

எளாவூர் சோதனை சாவடி வழியாக காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, டிச. 3: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவுக்கு மதுபாட்டில்கள் கடத்த முயன்ற காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இவ்வழியாக ஆந்திராவில் இருந்தும் தமிழகத்துக்கும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும்  செம்மரக்கட்டை, கஞ்சா, அபின், ரேஷன் அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாகனங்களில் கடத்துவதாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சென்னைக்கு வரும் வாகனங்களையும், தமிழகத்திலிருந்து ஆந்திராவை நோக்கி செல்லும் வாகனங்களையும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்தனர். தமிழகத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற சொகுசு காரை நேற்று போலீசார் மடக்கி சோதனையிட முயன்றனர். அப்போது, காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.  பின்பு, காரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் 48 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரை பறிமுதல் செய்து, தப்பிச் சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Elavur ,
× RELATED எளாவூர் சோதனைசாவடியில் 20 கிலோ கஞ்சா...