×

மனைவியுடன் தகராறு மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

குன்றத்தூர், டிச. 3: குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, விஜயலட்சுமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் (31). இவர் அதே பகுதியில் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமுதா (26) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் மாங்காடு, சரஸ்வதி நகர் அனெக்ஸ் பகுதியில் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் குன்றத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு உதயகுமார் சென்றார். அவரது தாய் பவானி சர்ச்சுக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, உதயகுமார் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த உதயகுமார் உடலை மீட்டு,  பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், உதயகுமாரும், அமுதாவும் காதல் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்ததாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அதனை தனது தாய் பவானியிடம் கூறுமாறு உதயகுமார் தெரிவித்துள்ளார். இதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த உதயகுமார் நேற்று தாய் வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

Tags :
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்