×

உறுதிமொழியை மீறிய கைதிக்கு 128 நாள் சிறை

பெரம்பூர்: புளியந்தோப்பு வாசுகி நகரை சேர்ந்தவர் மாரி (எ) லோடாங்கு மாரி (37). இவர் மீது பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு  ஓட்டேரி ஆகிய காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி புளியாந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் ஆஜரான மாரி, இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதிமொழி அளித்தார்.இந்நிலையில் அக்டோபர்   மாதம் 26ம் தேதி பிரியா என்பவரை தாக்கிய வழக்கில் மாரி கைது செய்யப்பட்டார். உறுதிமொழி மீறி குற்றச் செயலில் ஈடுபட்ட மாரியை 128 நாட்கள் ஜாமினில் வெளிவர முடியாதபடி சிறையிலடைக்க புளியந்தோப்பு  துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா உத்தரவிட்டார்.



Tags : violator ,
× RELATED சென்னை ராயப்பேட்டையில் உள்ள...