×

எட்டயபுரம் அருகே பைக் மீது லாரி மோதி 2 பேர் பலி

எட்டயபுரம், டிச. 1: எட்டயபுரம் அருகே பைக் மீது லாரி மோதி தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக இறந்தனர். சந்தைக்கு பைக்கில் ஆட்டை கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தெற்கு முத்தலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன்(55). இதே ஊர் நடுத்தெருவைச் சேர்ந்த மலையாண்டி(47). இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள். நேற்று ஒரு ஆட்டை விற்பதற்காக எட்டயபுரம் சந்தைக்கு பைக்கில் சென்றனர்.

மதுரை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கோட்டூர் இணைப்பு சாலை சந்திப்பில் மெயின் ரோட்டுக்கு வந்தபோது, பின்னால் திருச்சியில் இருந்து நெல்லைக்கு சீனி லோடு ஏற்றி வந்த வந்த லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். தகவலறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் எட்டயபுரம் அருகே  மேல ஈரால் வடக்கு தெருவைச் சேர்ந்த மகாகுரு(25), எட்டயபுரம் போலீசில் சரணடைந்தார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் பலியான முருகனுக்கு தனலட்சுமி(52) என்ற மனைவியும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மலையாண்டிக்கு முத்துலட்சுமி (43) என்ற மனைவி, கார்த்தி என்ற மகன், ரம்யா என்ற மகள் உள்ளனர். ஒரே ஊரில் இரு தொழிலாளிகள் விபத்தில் இறந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : truck crashes ,Ettiyapuram ,
× RELATED மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...