×

மணியாச்சி அருகே காற்றாலை நிறுவனத்தில் ரூ.3 லட்சம் பொருட்கள் திருட்டு

ஓட்டப்பிடாரம்,டிச.1: மணியாச்சி அருகே தனியார் காற்றாலை நிறுவனத்தில் சுமார் ரூ.3லட்சம் மதிப்பிலான காப்பர் கேபிள்கள் உள்ளிட்ட பொருள்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மணியாச்சி பகுதியில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் தேவைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த காப்பர் கேபிள்கள், ஆயில் கேன்கள் உள்ளிட்ட ரூ.2.95 லட்சம் மதிப்பிலான பொருட்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சூப்பர்வைசர் கருப்பaசாமி(38) அளித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : wind farm ,Maniyachi ,
× RELATED நெல்லை ரயில்களை பிடிக்க வசதியாக...