×

வடவாற்றில் ஆண் சடலம்

காட்டுமன்னார்கோவில், டிச. 1:  காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வரும். அப்பகுதி மழைக்கால நேரத்தில் ஏற்படும் வெள்ளம் காரணமாக கால்நடை சடலங்கள் மிதந்து வரும். இந்நிலையில், வடவாற்றில் ஆண் சடலம் மிதப்பதாக வந்த தகவலையடுத்து காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சம்பவ இடத்திற்கு சென்றனர். தீயணைப்பு நிலைய (பொறுப்பு) அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து மழையையும் பொருட்படுத்தாமல் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Northwestern ,
× RELATED பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால்...