×

64 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி

ஓசூர், டிச.1: ஓசூர் அடுத்த குருபரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சீக்கனப்பள்ளி கிராமத்தில் சாலைகள் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த பகுதியில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற ஓசூர் எம்எம்ஏ சத்யா 64 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் பேரிகை நாகேஷ், சின்னபில்லப்பா, சந்திரப்பா, முனிச்சந்திரன், முகமது சர்தார், சௌந்தராஜ், ராமச்சந்திரன், இனியாஷ், மணி, கிருஷ்ணப்பா, முனியப்பா, முனுசாமி, முனிராஜ், நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பயிரில் மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரமிட வேண்டும்