குலசேகரம், டிச.1: பொதுமக்களுக்கு அதிகம் பயன்பட்டு வரும் ரேசன் விநியோகத்தில் குளறுபடி செய்து அரிசி அளவை குறைத்து மக்களை பாதிப்படைய செய்வதை கண்டித்து திருவட்டார் ஒன்றிய திமுக சார்பில் திருவட்டார் தாலுகா அலுவலகம் முன் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். திருவட்டார் ஒன்றிய பொறுப்பாளர் ஜாண்பிறைட் முன்னிலை வகித்தார். தக்கலை ஒன்றிய செயலாளர் அருளானந்த ஜார்ஜ், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் ராஜன், திமுக பிரமுகர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் மவுண்ட் மேரி மனோகரன், சுந்தர்ராஜ், ஜோஸ்எட்வர்ட், பேரூர் செயலாளர்கள் ரமேஷ், வின்சென்ட், ஜாண்சன், செல்வகுமார், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் அலாவுதின், துணை அமைப்பாளர் செல்லப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயூ பிறேம்குமார், மகளிரணி துணை அமைப்பாளர் பினா அமிர்தராஜ், மாணவரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜெ.எம்.ஆர் ராஜா, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், லெனின், காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜு, திருவட்டார் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ஜெறோம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வர்க்கீஸ், மாநில பேச்சாளர் என்.ஆர் மணி, முன்னாள் கவுன்சிலர்கள் யோபு, ஜனல்குமார், ஊராட்சி செயலாளர்கள் மனோகரன், கலைகிரி, ஜோண்ஸ், சுந்தரதாஸ், டெய்சி, திருவட்டார் ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் செல்வகுமார், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் வின்சர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.