×

அஞ்சுகிராமம் அருகே விபத்து போதகர் உள்பட 3 பேர் காயம்

அஞ்சுகிராமம், டிச.1:  மயிலாடி  ஜோசப்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(38). இவர் ஒரு கிறிஸ்தவ சபையில்  போதகராக பணியாற்றிவருகிறார். இவர் தனது நண்பர்  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜோணி (30) என்பவருடன் அஞ்சுகிராமம் அருகே  உள்ள மேட்டு குடியிருப்பில் ஒரு சபையில் ஜெபம் முடித்துவிட்டு இரு சக்கர  வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.  அழகப்பபுரத்தில் வைத்து திருமூல நகரைச்  சேர்ந்த சகாய நிக்சன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூவரும்   படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதுகுறித்து அஞ்சுகிராமம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : persons ,pastor ,Anjugram ,accident ,
× RELATED ஒசூர் அருகே 17 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் கைது..!!