×

திருவெறும்பூர் அருகே வடிகால் ஆக்கிரமிப்பு தெருவில் ஓடைபோல் ஓடிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது

திருவெறும்பூர், டிச.1: திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் வழியாக வடியாமல் தேங்கியதோடு மழைநீர் வீட்டுகளுக்குள் புகுந்தது. காரணம் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்காலை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து செப்டிக்டேங்க் கட்டியுள்ளார். இதனால் மழைநீர் வடிய வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் குடியிருப்போர் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். இதனை கண்டித்து சாலை மறியல் நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். தகவலறிந்த ஒன்றிய அலுவலக ஊழியர் நடராஜன், வாழவந்தான்கோட்டை விஏஓ சுப்பிரமணி, துவாக்குடி எஸ்ஐ பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வீடுகளில் புகுந்த மழை நீர் வடிவதற்கு ஏற்பாடு செய்தனர். மேலும் ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி கட்டியவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் முயற்சியை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : houses ,Thiruverumbur ,street ,
× RELATED கூவம் ஆற்றங்கரை வீடுகளை அகற்ற...