திருப்பூர்,டிச.1: ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூரில் பணிபுரிந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ராணி, ஈரோடு மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி உதவி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் பணிபுரிந்த உதவி இயக்குனர்(தணிக்கை) அகமது, திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) முருகேசன், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் கிரி, கரூர் மாவட்ட உதவி இயக்குனராக(ஊராட்சிகள்) நியமிக்கப்பட்டுள்ளார்.