×

போத்தனூர்-செட்டிபாளையம் ரோட்டில் வாலிபர் சடலம் மீட்பு

கோவை, டிச.1:  கோவை போத்தனூர்- செட்டிபாளையம் ரோட்டில் உள்ள வடிவுநகரில் சாலையோரத்தில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் போத்தனூர் ஈஸ்வர் நகரை சேர்ந்த குமணன் (33) என்பதும், பைனான்ஸ் நிறுவனத்தில் தவணை செலுத்தாதவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
அவர்  தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : road ,Pothanur-Chettipalayam ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...