×

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

வாடிப்பட்டி, டிச.1:  வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த மையத்தில் புகுந்த நபர், ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட சிறிய கேமராவை மறைத்து விட்டு கல்லால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்தினார். இதில் ஏடிஎம்மின் முன்பக்க கதவு திறந்து கொண்டது. பின்னர் பணம் வைக்கப்பட்டுள்ள இரும்பு பெட்டியை உடைத்து திறக்க முயன்றார். ஆனால் இரும்பு பெட்டி திறக்காததால் அங்கிருந்து தப்பியோடினார். நேற்று காலை ஏடிஎம் மையத்துக்கு வந்த காவலாளி, இதுகுறித்து வாடிப்பட்டி போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

Tags : ATM ,
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...