×

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோவை, டிச.1: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன்(27). கோவை பீளமேடு பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேரன்மாநகர் பகுதியில் புதிய கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார். 2வது மாடியில் டிரில்லிங் மெஷினை வைத்துக்கொண்டு சுவரில் துளையிட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. சக ஊழியர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வேடியப்பன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு