×

வீட்டு சுவற்றின் உள்ளே தும்பிக்கையை விட்டு உணவு தேடிய காட்டு யானை

பெ.நா.பாளையம், டிச. 1:  கோவை அருகே நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த வீட்டின் காம்பவுண்டு சுவற்றின் உள்ளே தும்பிக்கையை விட்டு உணவு தேடிய சம்பவம்  அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  துடியலூர் அருகே உள்ளது கதிர்நாயக்கன்பாளையம். இங்குள்ள லட்சுமி நகர் மூன்றாவது வீதியில் உள்ள சக்தி குரு கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மூன்று காட்டு யானைகள் உலா வந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள முன்பு இருந்த வாழை மரங்களை சாப்பிட்டது. தேவையான உணவு கிடைக்காததால் காம்பவுண்டு சுவற்றின் உள்ளே தும்பிக்கையை நுழைத்து உணவு தேடின. அதன் பின் வேறு பகுதிக்கு சென்று விட்டன. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, இந்த பகுதியில் தெருவிளக்கு வசதிகள் இருந்தும் அவை முறையாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட முடியாமல் அச்சத்துடனே இருந்து வருகிறோம். எனவே மின்வாரிய அதிகாரிகள் தெரு விளக்குகளை சீரமைத்து தர வேண்டும், என்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்