×

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ஈரோடு, டிச. 1:   ஈரோடு கிருஷ்ணம்பாளையம் போயர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (48). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 28ம் தேதி ஈரோடு வைராபாளையத்தில் உள்ள சென்டரிங் மில்லில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மில்லின் சுவர் இடிந்து முத்துசாமியின் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த முத்துசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். பலியான முத்துசாமிக்கு அழகுராணி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு