ஈரோடு, டிச. 1: ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி நகரை சோ்ந்த கிருஷ்ணபிள்ளை மனைவி சுப்பம்மாள் (76). இவர் அவரது பேரன் முருகன் (38) வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் முருகன் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பம்மாளை தேடி வருகின்றனர்.