×

கணவன் மதுப்பழக்கத்தை விடாததால் மனைவி தீக்குளித்து தற்கொலை

ஈரோடு, டிச. 1: ஈரோடு காசிபாளையம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் தம்புரான் (55). வெல்டர். இவரது மனைவி கற்பகம் (50). இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். தம்புரானுக்கு மதுப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி மது குடித்து விட்டு வருவார். இதனால் தம்புரானை மது குடிக்க வேண்டாம் என கற்பகம் கூறி வந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி தம்புரான் வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த கற்பகம் வீட்டில் இருந்த மண் எண்ணைய்யை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம் பக்கத்தினர் கற்பகத்தை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கற்பகம் உயிரிழந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை