×

சூதாடிய 3 பேர் கைது

ஈரோடு, டிச. 1: ஈரோடு மாவட்டம் அந்தியூர் சமத்துவபுரம் பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு சீட்டாட்டம் விளையாடிக்கொண்டிருந்த அந்தியூர் ஆத்தப்பம்பாளையம் கதிர்வேல் (41), புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் (50), கூடுமையனூரை சேர்ந்த ரமேஷ் (38) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.940 ரொக்கம் மற்றும் சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு