×

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

நாமக்கல், நவ.29:நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பெரியசாமி(43). இவர் நேற்று, நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் மணி என்பவருக்கு சொந்தமான வீடு கட்டுமான பணியில், 3வது மாடியில் கான்கிரீட் கலவை போட்டு கொண்டிருந்தார்.  கலவை இரும்பு ரோப் மூலம் அனுப்பப்பட்டது. இந்த பணி முடிந்த பிறகு இரும்பு ரோப்பை  பெரியசாமி கழட்டிய போது, அருகில் சென்ற மின்சார கம்பி மீது இரும்பு ரோப் உரசியது. இதில் மின்சாரம் தாக்கிய பெரியசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Maestri ,
× RELATED மாணவிக்கு காதல் டார்ச்சர்: மேஸ்திரி போக்சோவில் கைது